நடவடிக்கை செய்தி
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மின்பிடி படகொன்று கடற்படையினரால் கைது
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை விரட்டுவதற்காக இலங்கை கடற்படையினர் இன்று (2023 டிசம்பர் 13) காரைநகர் கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்ட விசேட நடவடிக்கைகளின் போது இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றுடன் ஆறு (06) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
14 Dec 2023
சிலாவத்துறை பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 07 பேர் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர் இன்று (2023 டிசம்பர் 13,) அதிகாலை சிலாவத்துறை கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இரவு சுழியோடி நடவடிக்கைகளை மேற்கொண்ட ஏழு (07) பேருடன் இரண்டு டிங்கி படகுகள் (02), எண்ணூற்று எழுபத்து நான்கு ( 874) கடல் அட்டைகள் மற்றும் சுழியோடி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன.
13 Dec 2023
சட்டவிரோத போதை மாத்திரைகள் பொதி யொன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
இலங்கை கடற்படையினரால் மன்னார் ஒலுதுடுவாய் கடற்கரைப் பகுதியில் 2023 டிசம்பர் 11 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது அப்பகுதியில் சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் சுமார் ஆறாயிரம் (6,000) Pregabalin போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது.
13 Dec 2023


