நடவடிக்கை செய்தி

மட்டக்களப்பில் சட்டவிரோத விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 1440 மாத்திரைகளுடன் சந்தேகநபர் கைது!

இலங்கை கடற்படை மற்றும் மட்டக்களப்பு, கல்லடி பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து 2024 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி மட்டக்களப்பு பிரதேசத்தில் நடத்திய கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்கு தயார்படுத்தப்பட்ட ஆயிரத்து நானூற்று நாற்பது (1440) பிரேகபலின் காப்ஸ்யூல்கள் கையிருப்புடன் சந்தேக நபர் ஒருவர் (01) மற்றும் கார் (01) கைப்பற்றப்பட்டது.

12 May 2024

சட்டவிரோதமான முறையில் தங்கம் வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் தொல்பொருட்களுடன் கல்பிட்டியில் சந்தேகநபர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்

இலங்கை கடற்படை, புத்தளம் பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து 2024ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் திகதி கல்பிட்டி, ஆலங்குடா பிரதேசத்தில் நடத்திய கூட்டுத் தேடுதல் நடவடிக்கையில் அந்தப் பகுதியிலுள்ள வீடொன்றில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த தங்கம் என சந்தேகிக்கப்படும் தொன்மைப் பொருட்களுடன் சந்தேகநபர் (01) கைது செய்யப்பட்டுள்ளார்.

12 May 2024