நடவடிக்கை செய்தி
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட 338 கிலோ பீடி இலைகள் வடமேற்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கை கடற்படையினர் 2024 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி கல்பிட்டி இப்பண்தீவ் கடற்பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வர முயன்ற சுமார் முந்நூற்று முப்பத்தெட்டு (338) கிலோகிராம் பீடி இலைகளை (ஈரமான எடையுடன்) கைப்பற்றினர்.
17 May 2024
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 பேர் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளனர்
இலங்கை கடற்படை; 2024 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி முல்லைத்தீவு, அம்பலன்பொக்கனே கடற்பரப்பிலும், திருகோணமலை பொடுவகட்டு கடற்பரப்பிலும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் விளைவாக சட்ட விரோதமாக மின் விளக்குகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட மற்றும் சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டு மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட எட்டு (08) நபர்களுடன் மூன்று (03) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
17 May 2024


