நாடு முழுவதும் அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக புத்தளம், மாதம்பே, கடுப்பிட்டி ஓய நிரம்பி வழிவதால் ஹேனபொல பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. குறித்த வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 2024 மே மாதம் 26 ஆம் திகதி கடற்படையின் நிவாரணக் குழுவொன்று நியமிக்கப்பட்டதுடன் தற்போது மீட்பு குழுவினர் அப்பகுதி மக்களுக்கு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.