நடவடிக்கை செய்தி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையினர் தொடர்ந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்

சீரற்ற காலநிலையைக் கருத்தில் கொண்டு மேற்கு, தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள கடற்படையின் அனர்த்த மீட்புக் குழுவினர், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக மீட்பதற்காக சிறிய படகுகள் மூலம் தொடர்ந்தும் அனர்த்த நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

02 Jun 2024

தென் கடற்பரப்பில் ஆபத்தில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்ட 06 மீனவர்களும் கடற்படையினரால் கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்

இலங்கைக்கு தெற்கே தேவுந்தர முனையில் இருந்து சுமார் 480 கடல் மைல் (சுமார் 889 கிமீ) தொலைவில் உள்ள ஆழ் கடற்பரப்பில் ஆபத்தில் சிக்கிய நிலையில் கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன் வெளிநாட்டுக் கப்பலொன்று மூலம் மீட்கப்பட்ட பல நாள் மீன்பிடிப் படகொன்றில் இருந்த 06 இலங்கை மீனவர்களும் இன்று (2024 ஜூன் 02) கடற்படையினரால் காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளது.

02 Jun 2024

மோசமான வானிலையை எதிர்கொண்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படையின் நிவாரண குழுக்கள் தயார் நிலையில்

மோசமான காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 2024 ஜூன் மாதம் 01 ஆம் திகதி, களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கல, புவக்பிட்டிய, பாலிந்தநுவர மற்றும் காலி மாவட்டத்தின் வெலிபன்ன, அக்குரஸ்ஸ மற்றும் பாணடுகம ஆகிய இடங்களுக்கு கடற்படையின் அனர்த்த நிவாரண குழுக்களை அனுப்பியுள்ளனர். தற்போது குறித்த நிவாரணக் குழுக்கள் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

02 Jun 2024