நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு குடிபெயர்ந்ததாக சந்தேகிக்கப்படும் 05 பேரும் அவர்களுக்கு உதவிய 02 பேரும் தலைமன்னார் பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது

2024 ஜூன் மாதம் 02 ஆம் திகதி இரவு தலைமன்னார் ஊருமலைப் பகுதியில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட ரோந்துப் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு குடியேறியதாக சந்தேகிக்கப்படும் ஐந்து (05) இலங்கையர்கள் மற்றும் இந்த சட்டவிரோத செயலுக்கு உதவிய 02 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

03 Jun 2024

மேற்கு, தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையினர் தொடர்ந்து நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மேற்கு, தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள கடற்படையின் அனர்த்த நிவாரணக் குழுக்கள்; கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக மீட்பதற்காகவும் அவர்களின் அன்றாட தேவைகளுக்காகவும் படகுகள் மூலம் போக்குவரத்து வசதிகள் மற்றும் அனர்த்த நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன.

03 Jun 2024