நடவடிக்கை செய்தி

மேற்கு, தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையினர் தொடர்ந்து நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்

கடுமையான காலநிலைக்கு மத்தியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மேற்கு, தெற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களுக்கு அனுப்பியுள்ள கடற்படை நிவாரண குழுக்கள் இன்று மாலை (03 ஜூன் 2024) ஆகும் போது கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் வெள்ள அனர்த்தங்களில் இருந்து 102 நபர்களை மீட்டுள்ளன. சுமார் தொள்ளாயிரத்து பத்தொன்பது (919) பேருக்கு படகுகள் மூலம் அவர்களின் அன்றாட தேவைகளுக்கு போக்குவரத்து வசதிகள் வழங்கப்பட்டன, மேலும் ஐம்பது (50) நிவாரண குழுக்கள் இன்னும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

04 Jun 2024