இலங்கை கடற்படை, கரையோரப் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் கிரிந்த பொலிஸார் இணைந்து 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி இரவு திஸ்ஸமஹாராம, கிரிந்த போன்ற பகுதிகளில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, நூற்று நான்கு கிலோகிராம்களுக்கு அதிகமான (104) உள்ளூர் கஞ்சாவை கொண்டு சென்ற இரண்டு சந்தேக நபர்கள் (02) மற்றும் ஒரு கெப் (01) ஆகயன கைது செய்யப்பட்டன.