நடவடிக்கை செய்தி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 38 பேர் கடற்படையினரால் கைது

திருகோணமலை இரணைகேணி, நிலாவெளி, முல்லைத்தீவின் கொக்கிளாய், வெத்தலகேணியின் சளை, ஏறக்கண்டி மற்றும் திருகோணமலை எலிசபெத் முனை ஆகிய கடற்பரப்புகளில் 2024 ஜூன் 30 முதல் ஜூலை 03 வரை மேற்கொள்ளப்பட்ட தொடர் தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோத வலைகள் மற்றும் மின் விளக்குகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 38 பேருடன் 07 டிங்கி படகுகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி சாதனங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

04 Jul 2024