நடவடிக்கை செய்தி

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 02 இந்திய மீன்பிடி படகுகள் கைது

இலங்கை கடற்படையினர் மற்றும் கடலோர காவல்படை திணைக்களம், இன்று (2024 ஜூலை 23) அதிகாலை, யாழ் நெடுந்தீவிற்கு அப்பால் இலங்கை கடல் பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு (02) இந்திய மீன்பிடி படகுகளுடன் ஒன்பது (09) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

23 Jul 2024