நடவடிக்கை செய்தி

கல்பிட்டி தோரயடி குளத்தில் மூழ்கி கிடந்த 04 கிலோ 740 கிராம் தங்கம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

2024 ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி கல்பிட்டி தோரயடி குளத்தில் மேற்கொண்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, கடத்தல்காரர்களினால் குளத்தில் மூழ்கடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 04 கிலோ 740 கிராம் தங்கம் அடங்கிய பொதியொன்று இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன், குறித்த தங்கம் அடங்கிய பொதியை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் டிங்கி படகொன்றும் தோரயடி கடற்கரை பகுதியில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

07 Aug 2024