நடவடிக்கை செய்தி

கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பில் வட கடலில் விபத்துக்குள்ளான மீன்பிடி படகில் இருந்த மீனவர்களை மீட்க இந்திய கடலோர காவல்படையின் உதவி

இலங்கைக்கு வடக்கின் பருத்தித்துறையில் இருந்து சுமார் 447 கடல் மைல் (சுமார் 827 கி.மீ) தொலைவில் ஆழ்கடலில் விபத்துக்குள்ளான இலங்கை மீன்பிடி படகொன்றில் இருந்த நான்கு (04) மீனவர்கள் கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பில் இந்திய மீன்பிடிப் படகொன்று மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக இந்தியாவின் சென்னை, கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையம், கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு 21 ஆகஸ்ட் 2024 அன்று தகவல் அளித்துள்ளது.

22 Aug 2024