நடவடிக்கை செய்தி
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 552 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர் 2024 ஆகஸ்ட் 25 மற்றும் 27 ஆம் திகதிகளில் நெடுந்தீவின் உறிமுனாய், வெள்ளியல் மற்றும் சிலாவத்துறை கொண்டச்சிக்குடா கரையோரங்களில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற சுமார் ஐந்நூற்று ஐம்பத்து இரண்டு (552) கிலோகிராம் (ஈரமான எடை) பீடி இலைகள் கைது செய்யப்பட்டது.
28 Aug 2024
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 650 கையடக்க தொலைபேசிகளுடன் சந்தேகநபர் ஒருவர் புத்தளம் கரம்ப பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்
இலங்கை கடற்படை மற்றும் இலங்கை பொலிசார் இணைந்து 2024 ஆகஸ்ட் 27 ஆம் திகதி புத்தளம் கரம்ப பகுதியில் உள்ள வீதித் தடுப்பில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 650 கையடக்கத் தொலைபேசிகளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் கெப் வண்டி மூலம் சாதனங்களை கொண்டு செல்லும் போது இவ்வாரு கைது செய்யப்பட்டுள்ளார்.
28 Aug 2024


