நடவடிக்கை செய்தி
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 843 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர் 2024 செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதி சிலாபம் குளத்தின் மையக்குளம பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற சுமார் எண்ணூற்று நாற்பத்து மூன்று (843) கிலோகிராம் பீடி இலைகள் கைது செய்யப்பட்டது.
05 Sep 2024
ஆழ்கடலில் விபத்துக்குள்ளான "நிஹதமாணி 01" என்ற பல நாள் மீன்பிடி படகில் இருந்து மீட்கப்பட்ட 4 மீனவர்களும் கஜபாகு கப்பல் மூலம் காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டது
2024 செப்டெம்பர் மாதம் 03 ஆம் திகதி காலியில் இருந்து சுமார் 241 கடல் மைல் (501 கி.மீ) தொலைவில் ஆழ்கடலில் தத்தளித்த "நிஹதமாணி 01" என்ற பல நாள் மீன்பிடிக் படகில் இருந்து "லசந்த 01" என்ற பல நாள் மீன்பிடிக் படகு மூலம் மீட்கப்பட்ட நான்கு (04) மீனவர்களையும் இலங்கை கடற்படைக் கப்பல் கஜபாகு கப்பலிடம் ஆழ்கடலில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட பிறகு, மேலதிக சிகிச்சைக்காக 2024 செப்டெம்பர் 4 ஆம் திகதி காலி துறைமுகத்திற்கு அழைத்து வந்து கராப்பிட்டி போதனா வைத்தியசாலைக்கு அனுப்ப கடற்படையினர் நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.
05 Sep 2024


