நடவடிக்கை செய்தி

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 03 இந்திய மீன்பிடி படகுகள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு திணைக்களம் இணைந்து இன்று (2024 செப்டெம்பர் 07) யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று (03) இந்திய மீன்பிடி படகுகளுடன் 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

08 Sep 2024