நடவடிக்கை செய்தி
சுமார் 37 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் பளை பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படை; பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து 2024 செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி சாவகச்சேரி பளை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, தொண்ணூற்று நான்கு (94) கிலோ ஐந்நூற்றி இருபது (520) கிராம் கேரள கஞ்சாவுடன், சந்தேகநபர் ஒருவர் (01) மற்றும் கெப் வண்டி (01) கைது செய்யப்பட்டன.
15 Sep 2024
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 18 பேர் கைது
கிளிநொச்சி, கல்பிட்டி மற்றும் திருகோணமலை கடற்பகுதிகளில் 2024 செப்டெம்பர் மாதம் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் இலங்கை கடற்படையினர், இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் சட்டவிரோத மின் விளக்குகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பதினெட்டு (18) நபர்களுடன் ஒன்பது (09) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.
15 Sep 2024


