இயந்திரக் கோளாறு காரணமாக யாழ்ப்பாணம் கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு அருகில் இலங்கை கடற்பரப்பிற்குள் வந்த இந்திய மீன்பிடி இழுவை படகுக்கு இலங்கை கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையினர் உதவினர். 2024 செப்டம்பர் 22 அன்று படகை பரிசோதித்த பிறகு, பழுதுபார்க்கப்பட்டு குறித்த இழுவைப் படகு அதன் 05 பணியாளர்களுடன், 2024 செப்டம்பர் 23 ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் இருந்து பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது.