நடவடிக்கை செய்தி

1400 வெளிநாட்டு சிகரட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கொழும்பு துறைமுக நகர நுழைவாயிலுக்கு அருகில் வைத்து கைது

இலங்கை கடற்படை மற்றும் கொழும்பு பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வு அலுவலகம் இணைந்து 2024 ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி கொழும்பு துறைமுக நகரை அண்மித்த பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, விற்பனைக்காக தயார் செய்யப்பட்ட சுமார் ஆயிரத்து நானூறு (1400) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டார்.

03 Oct 2024