இலங்கை கடற்படை, இலங்கை பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து 2024 ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி, கொழும்பு ஹெட்டியாவத்தை மற்றும் தலைமன்னார், பேசாலை ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது விற்பனைக்கு தயார் செய்யப்பட்ட 1500 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் 02 சந்தேக நபர்கள் (ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்) கைது செய்யப்பட்டுள்ளனர்.