இலங்கை கடற்படையினர், திருகோணமலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்துடன் இணைந்து 2024 ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி திருகோணமலை நொச்சிக்குளம் பிரதேசத்தில் நடத்திய விசேட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, விற்பனைக்கு தயார் செய்யப்பட்டிருந்த முந்நூற்று பத்து (310) கிராம் பதினைந்து (15) மில்லிகிராம் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டுள்ளார்.