இலங்கை கடற்படையினர் 2024 ஒக்டோபர் 23 ஆம் திகதி யாழ்ப்பாணம், கச்சத்தீவுக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு (02) இந்திய மீன்பிடி படகுகளுடன் பதினாறு (16) இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.