நடவடிக்கை செய்தி

ஆழ்கடலில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது இலங்கையில் போதைப்பொருள் கடத்திய பல நாள் மீன்பிடிப் படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

கடற்படையினரால், இலங்கைக்கு மேற்கே ஆழ்கடல் பகுதியில் இன்று (நவம்பர் 14 2024) மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் பேது, போதைப்பொருள் கடத்திய பல நாள் மீன்பிடிப் படகுடன் ஆறு (06) சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடிக் படகில் சுமார் 60 கிலோ கிராம் போதைப்பொருள் இருந்ததாக சந்தேகிக்கப்படுவதுடன், பல நாள் மீன்பிடிப் படகு மற்றும் சந்தேக நபர்கள் மேலதிக விசாரணை மற்றும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்படையினரால் கரைக்கு கொண்டு வரப்பட்டனர்.

14 Nov 2024

சட்டவிரோதமான முறையில் இரவு சுழியோடி நடவடிக்கைகள் மேற்கொண்ட 05 பேர் கடற்படையினரால் கைது

மன்னார் வங்காலை மற்றும் சிலாவத்துறை கடற்கரைப் பகுதியில் 2024 நவம்பர் மாதம் 13 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது, சட்டவிரோத சுழியோடி நடவடிக்கையின் மூலம் பிடிக்கப்பட்ட சுமார் ஆயிரத்து ஐம்பத்தைந்து (1055) கடலட்டைகளுடன், ஐந்து (05) சந்தேக நபர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

14 Nov 2024