இலங்கைக்கு தென்மேற்கு திசையில், காலி கலங்கரை விளக்கத்திலிருந்து 78 கடல் மைல் (சுமார் 144 கி.மீ) தொலைவில் உள்ள ஆழ்கடலில் இலங்கையில் பல நாள் மீன்பிடி படகொன்றில் நோய்வாய்ப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த மீனவர் ஒருவர் கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பில் இன்று (2024 நவம்பர் 20) கரைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.