இலங்கை கடற்படையினருக்கும் மாலைதீவு கடலோர காவல்படையினருக்கும் இடையிலான வெற்றிகரமான புலனாய்வுப் பரிமாற்றத்தின் விளைவாக, 344 கிலோகிராம் ஐஸ் போதைப் பொருள் (Crystal Methamphetamine) மற்றும் 124 கிலோகிராம் கொக்கேயின் போதைப் பொருள் கொண்டு சென்ற பல நாள் மீன்பிடிப் படகுடன் ஐந்து சந்தேக நபர்கள் கடந்த 2024 நவம்பர் 23ம் திகதி மாலத்தீவு கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டனர்.