நடவடிக்கை செய்தி

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றுடன் 18 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2024 டிசம்பர் 02 ஆம் திகதி யாழ்ப்பாணம், வெத்தலக்கேணிக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றுடன் (01) பதினெட்டு (18) இந்திய மீனவர்கள் இந்திய - இலங்கை சர்வதேச கடற்பரப்பை கடந்து இலங்கையை நோக்கி சுமார் 30 கடல் மைல் தொலைவில் இருந்தபோது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

03 Dec 2024