நடவடிக்கை செய்தி

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 02 இந்திய மீன்பிடி படகுகள் வடகடலில் வைத்து கைது

இலங்கை கடற்படையினர், கடலோரக் காவல் திணைக்களத்துடன் இணைந்து இன்று (2024 டிசம்பர் 08) யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு (02) இந்திய மீன்பிடி படகுகளுடன் எட்டு (08) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

08 Dec 2024