இலங்கை கடற்படையினர் இந் நாட்டின் சட்ட அமுலாக்க முகவர் மற்றும் பிராந்திய கடல்சார் பங்குதாரர்களுடன் இணைந்து கடந்த (2024) ஆண்டு மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம் போதைப்பொருள் மற்றும் போதைமருந்து கடத்தல், சட்டவிரோத பொருட்கள் கடத்தல் மற்றும் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 407 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நபர்களுடன், ரூ.28,158 மில்லியனுக்கும் அதிகமான போதைப்பொருள் மற்றும் போதைமருந்துகள் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயற்சித்த பெரிய அளவிலான பொருட்கள் கடற்படையினரால் கைப்பற்றபட்டது.