இலங்கை கடற்படையினர் 2025 ஜனவரி 07 முதல் 09 வரை மன்னார் ஒலுதுடுவாய், மாந்தை, வங்காலை, சிலாவத்துறை மற்றும் புத்தளம் தலுவ ஆகிய கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இருபத்தி எட்டு (28) நபர்களுடன் ஏழு (07) டிங்கி படகுகள் மற்றும் இழுவைப் படகொன்றும் (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.