நடவடிக்கை செய்தி

மஹகநதராவ பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படையினரால் தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன

தீவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள மோசமான வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பால் அனுராதபுரம் மாவட்டத்தின் பதவிய, புத்தாங்கல மற்றும் மஹகநதராவ அலுத்பாரகம பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க மூன்று (03) கடற்படை பேரிடர் நிவாரண குழுக்கள் நிறுத்தப்படுவதாகவும், தற்போது அந்த நிவாரண குழுக்கள் புத்தாங்கல மற்றும் மககநதராவ அலுத்பாரகம பகுதிகளில் அதிக மழைவீழ்ச்சி காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.

23 Jan 2025