சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற 342 கிலோகிராம் ஏலக்காய் மற்றும் 1231 கிலோகிராம் உலர்ந்த மஞ்சளுடன் கல்பிட்டியில் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது
இலங்கை கடற்படையினர் 2025 ஜனவரி 24 ஆம் திகதி கல்பிட்டி கீரமுண்டலம் கடற்கரைப் பகுதி மற்றும் தோரயடி கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது, 342 கிலோகிராம் ஏலக்காய் மற்றும் 1231 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் ஆகியவற்றைக் கொண்டு சென்ற இரண்டு சந்தேக நபர்களையும் ஒரு டிங்கி படகையும் கைப்பற்றினர். கடல் வழியாக நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வர முயன்ற 02 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கடல் வழியான கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க, தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடற்பரப்பை உள்ளடக்கிய வழக்கமான ரோந்து மற்றும் தேடல் நடவடிக்கைகளை கடற்படை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனத்தினால், கல்பிட்டியின் கீரமுண்டலம் கடற்கரைப் பகுதியில் 2025 ஜனவரி 24 ஆம் திகதி ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டது. அதன்போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு, கீரமுண்டலம் கடற்கரைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த எட்டு (08) பைகளில் பொதிச்செய்யப்பட்ட 240 கிலோகிராம் ஏலக்காயை கடற்படை கைப்பற்றியது. பின்னர், கல்பிட்டி தோரயடி கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்று சோதனை செய்யப்பட்டபோது, நாற்பது (40) பைகளில் பொதிச்செய்யப்பட்ட 1231 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் மற்றும் மூன்று (03) பைகளில் பொதிச்செய்யப்பட்ட (102) கிலோகிராம் ஏலக்காயையும் இரண்டு (02) சந்தேக நபர்களையும், (01) டிங்கி படகையும் கடற்படையினர் கைது செய்தனர்.
மேலும், இந்த நடவடிக்கைகளின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கல்பிட்டி ஆனவாசல பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் 23 முதல் 48 வயதுக்குட்பட்டவர்களாவர். கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இரண்டு (02) சந்தேக நபர்களும் 342 கிலோகிராம் ஏலக்காய், 1231 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் மற்றும் ஒரு (01) டிங்கி படகையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது.