நடவடிக்கை செய்தி

தலைமன்னாரில் 3,492 சங்குகளுடன் சந்தேகநபர் ஒருவர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், மற்றும் விமானப்படையினர் இணைந்து 2025 ஜனவரி 27 ஆம் திகதி தலைமன்னார் பேசாலை பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் மூவாயிரத்து நானூற்று இரண்டு (3,492) சங்குகளுடன், சந்தேகநபர் ஒருவர் (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டார்.

28 Jan 2025

சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 13 இந்திய மீனவர்களையும் இந்திய மீன்பிடி படகையும் கடற்படையினர் கைப்பற்றினர்

2025 ஜனவரி 27, அன்று, யாழ்ப்பாணத்தின் வெல்வெட்டித்துறைப் பகுதியிலிருந்து இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த ஏராளமான இந்திய மீன்பிடிக் கப்பல்களை வடக்கு கடற்படைக் கட்டளை அவதானித்து, அந்த கட்டளைக்கு சொந்தமான கடற்படையின் கப்பல்களை அனுப்புவதன் மூலம் அந்த மீன்பிடி படகுகளை நாட்டின் கடல் எல்லையில் இருந்து அகற்றும் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அங்கு குறித்த கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு மீன் வளங்களை சேகரித்துக்கொண்டிருந்த பதின்மூன்று (13) இந்திய மீனவர்களுடன் இந்திய மீன்பிடி படகொன்றும் (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

28 Jan 2025