நடவடிக்கை செய்தி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 நபர்கள் கைது

இலங்கை கடற்படையினர், கிளிநொச்சி முத்தலம்பிட்டி கடற்பகுதி மற்றும் முல்லைத்தீவு நந்திக்கடல் குள பகுதியில் 2025 பெப்ரவரி 03 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளை பிடித்து மற்றும் சட்டவிரோதமான வலைகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட 5 பேர் கொண்ட நான்கு (04) மீன்பிடி படகுகள் மற்றும் இருநூற்று ஐம்பது (250) சட்டவிரோத மீன்பிடி வலைகள் கைது செய்யப்பட்டன.

13 Feb 2025