நடவடிக்கை செய்தி

சுமார் 69 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கையிருப்புடன் யாழ்ப்பாண வத்திராயன் கடற்கரையில் கைது

இலங்கை கடற்படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து யாழ்ப்பாணம் கிளிநொச்சி வத்திராயன் கடற்கரைப் பகுதியில் 2025 மார்ச் மாதம் 04 ஆம் திகதி காலை மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடற்கரைப் பகுதியில் இருந்த நூற்று எழுபத்து நான்கு (174) கிலோ நூற்று இருபத்தி ஆறு (126) கிராம் கேரளா கஞ்சா தொகையானது கைப்பற்றப்பட்டது.

04 Mar 2025

கொழும்பில் 3000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் கைது

இலங்கை கடற்படையினர், கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து 2025 மார்ச் மாதம் 03 ஆம் திகதி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை அன்மித்த பகுதியில் மேற்கொண்ட கூட்டுத் தேடுதல் நடவடிக்கைனை போது, மூவாயிரம் (3000) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபரொருவர் (01) கைது செய்யப்பட்டார்.

04 Mar 2025

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முயன்ற 426 கிலோ பீடி இலைகளுடன் 03 சந்தேகநபர்கள் கல்பிட்டியில் வைத்து கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், 2025 மார்ச் மாதம் 03 ஆம் திகதி இரவு கல்பிட்டி கருவலக்குடா மற்றும் சின்னஅரிச்சாய் கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற நானூற்று இருபத்தி ஆறு (426) கிலோகிராம் பீடி இலைகளுடன் இரண்டு (02) டிங்கி படகுகள் மற்றும் மூன்று (03) சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

04 Mar 2025