நடவடிக்கை செய்தி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 26 பேர் கைது

2025 பெப்ரவரி 28ஆம் திகதி முதல் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09ஆம் திகதி வரை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது முல்லைத்தீவு நந்திக்கடல் கலப்பு, திருகோணமலை பின்குடா, மண்முனை, ஏறக்கண்டி, வெத்தலகேணி, மட்டக்களப்பு கலப்பு, யாழ்பாணம் குதிரை முனை, கிண்ணியா கரையோர மற்றும் கடல் பிரதேசங்களில் சட்டவிரோத நிலப்பகுதிகளில் இருபத்தி ஆறு (26) பேர் இரவில் சுழியோடி மீன்பிடித்தல், சட்டவிரோத கடலட்டைகளை பிடித்தல் மற்றும் வெடிமருந்து பயன்படுத்தி மீன்பிடித்த இருபத்தாறு (26) நபர்கள், இருநூற்று முப்பத்து மூன்று (233) சட்டவிரோத பொறி வலைகள், பன்னிரண்டு (12) சட்டவிரோத டிராமல் வலைகள், பதினொரு (11) மோனோபிலமென்ட் வலைகள், 2130 கடலட்டைகள், இரண்டு (02) கெப் வண்டிகள் மற்றும் நான்கு (04) டிங்கி படகுகள் கைது செய்யப்பட்டன.

12 Mar 2025

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வர முயன்ற சவர்க்காரங்களுடன் 02 சந்தேகநபர்கள் கல்பிட்டியில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2025 மார்ச் 11 ஆம் திகதி இரவு நேரத்தில் கல்பிட்டி இப்பண்தீவு கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயற்சித்த எண்ணூற்று ஐம்பத்தைந்து (855) சவர்க்கார கட்டிகளுடன் (01) டிங்கி மற்றும் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

12 Mar 2025