நடவடிக்கை செய்தி
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பொருட்கள் மற்றும் செல்லப்பிராணிகளுடன் 04 சந்தேக நபர்கள் கல்பிட்டி மற்றும் புத்தளம் பகுதிகளில் வைத்து கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர் இன்று (2025 ஏப்ரல் 23) அதிகாலை கல்பிட்டி, ஆலன்குடா கடல் பகுதியிலும் புத்தளம் தொடுவாவ பகுதியிலும் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரவும், கொண்டு செல்லவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு; ஏலக்காய் மற்றும் ஏலக்காய் விதைகள், ஸ்மார்ட் மொபைல் போன்கள், பெண்களுக்கான ஆயத்த ஆடைகள், ஒரு தொலைக்காட்சி, இரசாயன போத்தல்கள், குளிர்பான போத்தல்கள் மற்றும் எண்பது (80) புறாக்கள், ஒரு டிங்கி படகு, ஒரு வாடகை வண்டி மற்றும் நான்கு (04) சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்தனர்.
23 Apr 2025
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட வேளாண் இரசாயனங்கள், பீடி இலைகள் மற்றும் மசாலாப் பொருட்களை ஏற்றிச் சென்ற டிங்கி படகொன்று நீர்கொழும்பு பகுதியில் கடற்படையினரால் கைது
2025 ஏப்ரல் 22 ஆம் திகதி நீர்கொழும்புக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் இலங்கை கடற்படை மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கடல் பகுதியில் கைவிடப்பட்ட ஒரு டிங்கி படகிலிருந்து ஆயிரத்து நூற்று ஐம்பத்தாறு (1156) போத்தல்கள் வேளாண் இரசாயனங்கள், நான்காயிரத்து இருநூற்று இருபத்து நான்கு (4224) பக்கெட்டுகள் வேளாண் இரசாயனங்கள், அறுபத்தேழு (67) கிலோகிராம் எண்ணூறு (800) கிராம் பீடி இலைகள் மற்றும் எழுபத்தைந்து (75) கிலோகிராம் முன்னூறு (300) கிராம் ஏலக்காய் ஆகியவற்றை கடற்படையினர் கைது செய்தனர்.
23 Apr 2025
லுணுகம்வெஹெரவில் உள்ளூர் கஞ்சாவுடன் 02 சந்தேக நபர்கள் கைது
இலங்கை கடற்படையினர், காவல்துறையினருடன் இணைந்து 2025 ஏப்ரல் 20 ஆம் திகதி இரவு திஸ்ஸமஹாராம கிரிந்த பகுதியில் மேற்கொண்ட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த சுமார் 01 கிலோ 800 கிராம் உள்ளூர் கஞ்சாவுடன், 02 சந்தேக நபர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் (01) கைது செய்யதனர்.
23 Apr 2025
திருகோணமலையில் 565 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது
இலங்கை கடற்படை, திருகோணமலை துறைமுக காவல்துறை மற்றும் சர்தாபுர சிறப்பு அதிரடிப் படையுடன் இணைந்து, 2025 ஏப்ரல் 21 ஆம் திகதி திருகோணமலை நகரம் மற்றும் கோட்பே மீன்வளத் துறைமுக வளாகத்தில் மேற்கொண்ட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் விற்பனைக்காக தயாரிக்கப்பட்ட சுமார் ஐநூற்று அறுபத்தைந்து (565) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
23 Apr 2025


