நடவடிக்கை செய்தி
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 36 பேர் கைப்பற்றப்பட்டனர்
இலங்கை கடற்படையினர் கடற்றொழில் பரிசோதகர்களுடன் இணைந்து மட்டக்களப்பு கொட்டுவடம், திருகோணமலை சல்லிக்கோவில், ஏறக்கண்டி, எலிபன்ட் அய்லேண்ட், நந்திக்கடல், கல்லடி, பருத்தித்துறை மற்றும் முல்லைத்தீவு அலம்பில் கடற்பரப்பை அன்மித்த கடற்பரப்பில் 2025 மே 10 முதல் 19 ஆம் திகதி வரை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோத உபகரணங்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மீன்பிடித்த 36 நபர்களை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
21 May 2025
கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன
இலங்கை கடற்படையினர், 2025 மே மாதம் 10 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையில் இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட விசேட கூட்டு தேடுதல் நடவடிக்கைகயின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 108 கிலோகிராம் பீடி இலைகள் (ஈரமான எடையுடன்) , சுமார் 2,600 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒரு (01) சந்தேக நபரையும் மறைத்து வைக்கப்பட்டருந்த 732 கிராம் கொகேன் போதைப்பொருளானது கைப்பற்றப்பட்டது.
21 May 2025


