நடவடிக்கை செய்தி

உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 30 பேர் கடற்படையினரால்கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படை, இலங்கை கடலோர காவல்படை மற்றும் மீன்வள மற்றும் நீர்வளத் திணைக்களத்துடன் இணைந்து, கடந்த இரண்டு வருட நாட்களில் (2025 ஜூன் 09 முதல் ஜூன் 20 வரை) உள்ளூர் நீர்நிலைகளை உள்ளடக்கிய தேடிதல் நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் போது, பத்து (10) டிங்கி படகுகள் மற்றும் இரண்டு (02) தெப்பம் படகுகள் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட முப்பது (30) நபர்களைக் கைப்பற்றி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

29 Jun 2025

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிக் படகு ஒன்று மன்னார் வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், இன்று (2025 ஜூன் 29) அதிகாலை மன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த எட்டு (08) இந்திய மீனவர்களுடன் இந்திய மீன்பிடி படகுகொன்றறையும் (01) இலங்கை கடற்படையினர் கைது செய்யதனர்.

29 Jun 2025

வட கடலில் 47 மில்லியன் ரூபாவை விட பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் 03 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

யாழ்ப்பாணம் காரைநகர் கோவிலான் பகுதிக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் இன்று (2025 ஜூன் 27) அதிகாலை இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, தெரு மதிப்பு ரூ. 47 மில்லியனுக்கும் அதிகமான சுமார் இருநூற்று ஒன்பது (209) கிலோகிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற மூன்று (03) சந்தேக நபர்களும், ஒரு டிங்கி (01) படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

29 Jun 2025