நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 979 கிலோகிராம் உலர் இஞ்சியுடன் மூன்று சந்தேகநபர்கள் கல்பிட்டி எத்தாலை களப்பு பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

கடற்படையினர் 2025 ஜூலை 01 அன்று, கல்பிட்டி எத்தாலை களப்பு பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வர முயன்ற தொள்ளாயிரத்து எழுபத்தொன்பது (979) கிலோகிராம் உலர் இஞ்சியை ஏற்றி வந்த(03) மூன்று டிங்கிகளுடன் சந்தேகநபர்கள் (03) மூவரும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்.

02 Jul 2025

மன்னாரில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற 65 புறாக்களுடன் 2 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

மன்னார் நடுக்குடா கடற்கரைப் பகுதியில் 2025 ஜூன் 30 ஆம் திகதி கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட அறுபத்தைந்து (65) புறாக்களை ஏற்றி வந்த ஒரு டிங்கி (01) படகையும், இரண்டு (02) சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

02 Jul 2025

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிக் படகு ஒன்று மன்னார் வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படையினர், 2025 ஜூன் 30 இரவு மன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஏழு (07) இந்திய மீனவர்களுடன் இந்திய மீன்பிடி படகுகொன்றறையும் (01) இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.

02 Jul 2025