நடவடிக்கை செய்தி
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 1307 கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
இலங்கை கடற்படையினர், 2025 ஜூன் 30 முதல் ஜூலை 10 வரை புத்தளம் மற்றும் கல்பிட்டி கடற்கரை மற்றும் கடல் பகுதிகளில் கலால் துறையுடன் இணைந்து மேற்கொண்ட சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் 1307 கிலோகிராம் பீடி இலைகளுடன் இரண்டு (02) சந்தேக நபர்களும் இரண்டு (02) டிங்கிகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
14 Jul 2025
யாழ்ப்பாணம் நெடுந் தீவுக்கு அருகில் கடலில் கவிழ்ந்த “PERL LINK” கப்பலில் இருந்த பயணிகளை கடற்படையின் விரைவான நடவடிக்கையால் பாதுகாப்பாக தரையிறக்க கடற்படை உதவியது
யாழ்ப்பாணத்தின் நெடுந் தீவிலிருந்து குறிகட்டுவான் ஜெட்டிக்கு உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் குழுவை ஏற்றிக்கொண்டு சென்ற "PERL LINK" என்ற பயணிகள் படகு 2025 ஜூலை 12 ஆம் திகதி கவிழ்ந்ததுடன், பன்னிரண்டு (12) சுற்றுலாப் பயணிகளையும் இரண்டு (02) பணியாளர்களையும் பாதுகாப்பாக தரையிறக்க கடற்படை தேவையான உதவிகளை வழங்கியது.
14 Jul 2025
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 1330 கிலோகிராம் பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்
இலங்கை கடற்படையினர், 2025 ஜூலை 12 ஆம் திகதி புத்தளம், அக்கரயணத்தீவு பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகப்படும் சுமார் ஆயிரத்து முந்நூற்று முப்பது (1330) கிலோகிராம் மற்றும் முந்நூறு (300) கிராம் பீடி இலைகள், அப்பகுதியில் உள்ள ஒரு புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்தபோது கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
14 Jul 2025
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிக் படகு வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர், 2025 ஜூலை 13 அதிகாலையில் யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு அருகிலுள்ள இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஏழு (07) இந்திய மீனவர்களுடன் இந்திய மீன்பிடி படகுகொன்றறையும் (01) இலங்கை கடற்படையினர் கைது செய்யதனர்.
14 Jul 2025


