நடவடிக்கை செய்தி

இரண்டு வார காலப்பகுதியில் கடற்படை நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கைகள் மூலம் போதைப்பொருட்களுடன் 10 சந்தேக நபர்கள் கைப்பற்றப்பட்டன

இலங்கை கடற்படையினர், பொலிஸ், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் பொலிஸ் சிறப்புப் படை ஆகியவை 2025 ஜூலை 05முதல் 19 வரை கடுகண்ணாவ, அலதெனிய, தவுலகல, கம்பஹா, கட்டுநாயக்க, நிலாவெளி, திருகோணமலை மற்றும் மன்னார், நடுகுடா ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட சிறப்பு கூட்டுத் தேடுதல் நடவடிக்கைகளின் போது, பத்து (10) கிராம் நாற்பது (40) மில்லிகிராம் ஐஸ், பதினோராயிரத்து எண்ணூற்று அறுபது (11860) வெளிநாட்டு சிகரெட்டுகள், இருநூற்று அறுபத்து நான்கு (264) மாத்திரைகள் மற்றும் முப்பத்து மூன்று (33) மாத்திரை போத்தல்கள், ஐந்து (05) கிலோகிராம் அறுநூறு (600) கிராம் குஷ் போதைப்பொருள்கள், நூற்று நான்கு (104) கிராம் கேரள கஞ்சாவுடன் பத்து (10) சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்தனர்.

21 Jul 2025

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பூச்சிக்கொல்லிகள் மற்றும் மசாலாப் பொருட்களுடன் கல்பிட்டியில் 02 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்

இலங்கை கடற்படையினர், 2025 ஜூலை 17 ஆம் திகதி கல்பிட்டி, இப்பன்தீவு கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பூச்சிக்கொல்லிகள் மற்றும் மசாலாப் பொருட்களுடன் இரண்டு (02) சந்தேக நபர்களையும் மீன்பிடி படகொன்றையும் (01) கைது செய்தனர்.

21 Jul 2025