சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற பீடி இலைகள், விவசாய இரசாயனங்கள் மற்றும் மசாலாப் பொருட்களுடன் எட்டு சந்தேக நபர்களை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படையினர், 2025 ஜூலை 20 முதல் 22 வரை கற்பிட்டி வெல்லமுண்டலம், இப்பந்தீவு கடல் பகுதி, சிலாவத்துறை சவரிபுரம் அரிப்பு மேற்கு கடற்கரை பகுதி மற்றும் உச்சிமுனை வெல்ல தீவு ஆகிய இடங்களில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் இரண்டாயிரத்து முந்நூற்று தொண்ணூற்றொன்பது (2399) கிலோகிராம் பீடி இலைகள், முப்பத்தைந்து (35) கிலோகிராம் ஏலக்காய் மற்றும் ஒரு தொகை விவசாய இரசாயனங்களை ஏற்றிச் சென்ற நான்கு (04) டிங்கி படகுகளையும், எட்டு (08) சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு, கடற்படையினர், தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடற்கரையை உள்ளடக்கி வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜயவுடன் இணைக்கப்பட்ட கடற்படை சிறப்பு கப்பல் படைப்பிரிவு குழுவொன்றினால் கற்பிட்டியின் வெல்லமுண்டலம் கடல் பகுதியிலும் உச்சிமுனையில் உள்ள வெல்ல தீவு அருகிலும் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் விளைவாக, சுமார் எழுநூற்று எழுபத்தொன்பது (779) கிலோகிராம் பீடி இலைகள், முப்பத்தைந்து (35) கிலோகிராம் ஏலக்காய் மற்றும் இரண்டாயிரத்து அறுநூற்று இருபத்தொன்பது (2629) விவசாய இரசாயன போத்தல்கள், பாக்கெட்டுகள் மற்றும் நான்கு (04) சந்தேக நபர்களும் இப்பந்திவு கடல் பகுதியில் விரைவு நடவடிக்கை படகுப்படை தலைமையகம் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது, நாட்டிற்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சுமார் எண்ணூற்று எண்பத்து மூன்று (883) கிலோகிராம் பீடி இலைகளை ஏற்றிச் சென்ற (02) இரண்டு டிங்கி படகுகளுடன் நான்கு (04) சந்தேக நபர்களும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்.

இதேபோல், இலங்கை கடற்படை கப்பல் தேரபுத்த 2025 ஜூலை 21 ஆம் திகதி சிலாவத்துறையின் சவரிபுரம் அரிப்பு மேற்கு கடற்கரைப் பகுதியில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் எழுநூற்று முப்பத்தேழு (737) கிலோகிராம் பீடி இலைகளும் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற சுமார் 2399 கிலோகிராம் பீடி இலைகள், 35 கிலோகிராம் ஏலக்காய் மற்றும் 2629 விவசாய இரசாயன போத்தல்கள் மற்றும் பாக்கெட்டுகள் கடற்படையால் கைப்பற்றப்பட்டன.

இந்த நடவடிக்கைகளின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20 முதல் 55 வயதுக்குட்பட்ட கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். சந்தேக நபர்கள், பீடி இலைகள், ஏலக்காய், விவசாய இரசாயனங்கள் மற்றும் டிங்கி படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மற்றும் மன்னார் மதுவரி சிறப்புப் பிரிவுகளிடம் ஒப்படைக்கப்பட்டன.