சட்டவிரோத மீன்பிடியை தடுப்பதற்காக கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 28 பேர் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படையினர், யாழ்ப்பாண சிறப்பு அதிரடிப் படையுடன் இணைந்து, கடந்த பதினைந்து நாட்களில் (2025 அக்டோபர் 08 முதல் அக்டோபர் 19 வரை) உள்ளூர் நீர்ப்பரப்புகளை உள்ளடக்கிய வகையில், தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட, இருபத்தெட்டு (28) சந்தேக நபர்களுடன், எட்டு டிங்கி படகுகளை கைப்பற்றினர்.

அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளையால் திருகோணமலையில் உள்ள இறக்கண்டி, நல்லூர், பரவிடுபத, கொடிமுனை, நாயாறு, வெருகல்மொஹொட்டுவரம், சுதைக்குடா ஆகிய கடற்கரை மற்றும் கடல் பகுதிகளிலும், வடக்கு கடற்படை கட்டளையால் யாழ்ப்பாணத்தில் பருத்தித்துறை கடற்கரை மற்றும் கடல் பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், யாழ்ப்பாண காவல்துறை சிறப்பு அதிரடிப் படையின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டன. மீன்பிடி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

மேலும், இந்த நடவடிக்கைகளில் பிடிபட்ட சந்தேக நபர்கள், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மற்றும் மீன்பிடி படகுகள் திருகோணமலை, ஈச்சலம்பத்துவ, குச்சவெளி, கோட்பே, யாழ்ப்பாணம் பருத்தித்துறை மற்றும் முல்லைத்தீவு ஆகிய இடங்களில் உள்ள மீன்வள அலுவலகங்களில் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டன.