நடவடிக்கை செய்தி

உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மீன்பிடி படகு வடகடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படை, கடலோர காவல்படையுடன் இணைந்து, 2025 நவம்பர் 09 ஆம் திகதி இரவு அனலைதீவுக்கு அருகே இலங்கை கடல் பகுதியில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, உள்ளூர் கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட ஒரு (01) இந்திய மீன்பிடி படகு மற்றும் பதினான்கு (14) இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

10 Nov 2025

மன்னாரில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற பீடி இலைகளுடன் மூன்று சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

மன்னார் ஓலைத்தொடுவாய் கடற்கரைப் பகுதியில் 2025 நவம்பர் 08 ஆம் திகதி இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற சுமார் ஆயிரத்து இருநூற்று பதினொரு (1211) கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் ஒரு (01) டிங்கி படகுடன் மூன்று (03) சந்தேக நபர்களை கடற்படையினர் கைப்பற்றினர்.

10 Nov 2025

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட மருந்து மாத்திரைகள், திரவங்கள் மற்றும் களிம்புகளுடன் கல்பிட்டியவில் 04 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

2025 நவம்பர் 06 ஆம் திகதி கல்பிட்டி இப்பந்தீவு கடல் பகுதி மற்றும் கருவலக்குடா கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஏராளமான மருந்து மாத்திரைகள், திரவங்கள் மற்றும் களிம்புகளுடன் ஒரு டிங்கி (01) மற்றும் நான்கு (04) சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டனர்.

10 Nov 2025