நடவடிக்கை செய்தி
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 57 பேர் கைது
கடற்றொழில் பரிசோதகர் காரியாலயம் மற்றும் இலங்கை பொலிஸாருடன் இணைந்து இலங்கை கடற்படையினர் 2025 மார்ச் 08 முதல் மார்ச் 20 வரை முல்லைத்தீவு நந்திக்கடல் களப்பு, திருகோணமலை கோட்பே, இச்சலம்பத்து, கொகிலாய், கல்குடா, பொத்துவில் மற்றும் கின்னியா ஆகுய பிரதேசங்களில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம் இரவு நேரங்களில் சுழியோடி மீன்பிடித்தல், சட்டவிரோத கடலட்டைகளை பிடித்தல் மற்றும் சட்டவிரோத மீன்பிடித்தல் ஆகிய குற்றங்களுக்காக 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
26 Mar 2025
கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன், தென் கடலில் நோய்வாய்ப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்கு அனுப்ப கடற்படையின் உதவி
இலங்கைக்கு தெற்கே தேவந்திரமுனையில் இருந்து 326 கடல் மைல் (சுமார் 603 கி.மீ) தொலைவில் உள்ள ஆழ்கடலில் இலங்கையில் பல நாள் மீன்பிடி படகொன்றில் விபத்துக்குள்ளானதால் சுகவீனமுற்றிருந்த மீனவர் ஒருவர் கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பில் வெளிநாட்டுக் கப்பலின் உதவியுடன் 2025 மார்ச் 25 கரைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
25 Mar 2025
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக கொண்டு வர முயன்ற ஏலக்காய் மற்றும் அழகுசாதனப் பொருட்களுடன் 03 சந்தேகநபர்கள் மன்னாரில் கடற்படையினரால் கைது
மன்னார் தாவுல்பாடு கடற்கரையில் 2025 மார்ச் 23ஆம் திகதி காலை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 402 கிலோவிற்கும் அதிகமான ஏலக்காய், 3781 ஷாம்பு பாக்கெட்டுக்கள் மற்றும் 51 அழகுசாதனப் பாக்கெட்டுக்கள் ஆகியவற்றை ஏற்றிச் சென்ற டிங்கி படகு ஒன்றுடன் மூன்று (03) சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
24 Mar 2025
153 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியுடைய ஹஷிஸ் உள்ளிட்ட போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கொழும்பில் கைது
இலங்கை கடற்படை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தினால் கொழும்பு 12 பகுதியில் 2025 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி இரவு மேற்கொள்ளப்பட்ட விசேட கூட்டு தேடுதல் நடவடிக்கையில் 19 கிலோ 348 கிராம் ஹசீஸ், 348 கிராம் ஹெரோயின் மற்றும் 4 கிராம் ஐஸ் உடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
20 Mar 2025
இந்நாட்டு கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிக் படகொன்று வடகடலில் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர், 2025 மார்ச் 17ஆம் திகதி இரவு, யாழ்ப்பாணம் நெடுந் தீவுக்கு அப்பால், மேற்கொண்ட சிறப்பு தேடல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் இலங்கை கடற்பரப்பிற்குல் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிக் படகொன்றுடன் (01) இந்திய மீன்வர்கள் மூன்று (03) பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
18 Mar 2025
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 26 பேர் கைது
2025 பெப்ரவரி 28ஆம் திகதி முதல் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09ஆம் திகதி வரை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது முல்லைத்தீவு நந்திக்கடல் கலப்பு, திருகோணமலை பின்குடா, மண்முனை, ஏறக்கண்டி, வெத்தலகேணி, மட்டக்களப்பு கலப்பு, யாழ்பாணம் குதிரை முனை, கிண்ணியா கரையோர மற்றும் கடல் பிரதேசங்களில் சட்டவிரோத நிலப்பகுதிகளில் இருபத்தி ஆறு (26) பேர் இரவில் சுழியோடி மீன்பிடித்தல், சட்டவிரோத கடலட்டைகளை பிடித்தல் மற்றும் வெடிமருந்து பயன்படுத்தி மீன்பிடித்த இருபத்தாறு (26) நபர்கள், இருநூற்று முப்பத்து மூன்று (233) சட்டவிரோத பொறி வலைகள், பன்னிரண்டு (12) சட்டவிரோத டிராமல் வலைகள், பதினொரு (11) மோனோபிலமென்ட் வலைகள், 2130 கடலட்டைகள், இரண்டு (02) கெப் வண்டிகள் மற்றும் நான்கு (04) டிங்கி படகுகள் கைது செய்யப்பட்டன.
12 Mar 2025
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வர முயன்ற சவர்க்காரங்களுடன் 02 சந்தேகநபர்கள் கல்பிட்டியில் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர் 2025 மார்ச் 11 ஆம் திகதி இரவு நேரத்தில் கல்பிட்டி இப்பண்தீவு கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயற்சித்த எண்ணூற்று ஐம்பத்தைந்து (855) சவர்க்கார கட்டிகளுடன் (01) டிங்கி மற்றும் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
12 Mar 2025
சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை கடற்பரப்பிற்குல் இந்திய மீன்பிடிக் படகொன்று மன்னார் தெற்கு கடல் பிரதேசத்தில் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர், 2025 மார்ச் 06ஆம் திகதி அன்று இரவு மன்னார் தெற்கு கடலில் மேற்கொண்ட சிறப்பு தேடல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை கடற்பரப்பிற்குல் இந்திய மீன்பிடிக் படகொன்றுடன் (01) இந்திய மீன்வர்கள் பதினான்கு (14) பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
07 Mar 2025
சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட சுமார் 160000 வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் மாத்திரைகள் கல்பிட்டியவில் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர், 2025 மார்ச் 06ஆம் திகதி மாலை கல்பிடிய இப்பனதீவு கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையில், குறித்த கடற்கரைப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த டிங்கி படகொன்றில் இருந்த சட்டவிரோதமான முறையில் இந்நாட்டிற்கு கொண்டு வர முற்பட்ட சுமார் ஒரு இலட்சத்தி அறுபதாயிரம் (160,000) வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் இருபத்தி இரண்டாயிரத்தி நூறு (22,100) மாத்திரைகளுடன் குறித்த டிங்கி படகொன்று (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.
06 Mar 2025
பாணம பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு கடற்படையினர் தொடர்ந்தும் பங்களிக்கின்றனர்
கனமழை காரணமாக பாணம பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை 2025 மார்ச் 03 அன்று, ஆரம்பிக்கப்பட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம், இராணுவம் மற்றும் பொலிஸ் உள்ளிட்ட தரப்பினரின் பங்களிப்புடன் நடவடிக்கைகள் நடைப்பெறுகின்றன.
06 Mar 2025


