நடவடிக்கை செய்தி
உள்நாட்டு நீர்பரப்பில் அத்துமீறிய இந்திய மீன்பிடிக் படகு ஒன்று மன்னார் வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படையினர், 2025 ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் நெடுந் தீவிற்கு அன்மித்த உள்நாட்டு நீர்பரப்பிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த சந்தேகத்திற்கிடமான (01) இந்திய மீன்பிடிக் படகுடன் நான்கு (04) இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
04 Aug 2025
சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகளைத் தடுப்பதற்கான கடற்படையினரின் நடவடிக்கைகளில் 23 நபர்களுடன் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன

இலங்கை கடற்படை, மீன்பிடி மற்றும் நீர்வளத் திணைக்களத்துடன் இணைந்து கடந்த இரண்டு வாரங்களில் (2025 ஜூலை 23 முதல் ஜூலை 31 வரை) உள்ளூர் கடற்பரப்பை உள்ளடக்கி மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள், சுழியோடி உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட இருபத்தி இரண்டு (22) நபர்களையும், பொலிஸாருடன் இணைந்து விற்பனைக்கு தயார் செய்யப்பட்ட இருநூற்று பத்து (210) தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் ஐந்து (05) டிங்கிகள் மற்றும் ஒரு (01) சந்தேக நபரையும் கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
01 Aug 2025
கடற்படையினரால் மேற்கொண்ட நடவடிக்கையினால் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பீடி இலைகள் கைப்பற்றப்பட்டன

இலங்கை கடற்படையினர், 2025 ஜூலை 29 ஆம் திகதி நீர்க்கொழும்பு மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஐநூற்று எண்பத்து மூன்று (583) கிலோகிராமை விட அதிகமான பீடி இலைகளுடன் ஒரு (01) டிங்கி படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
01 Aug 2025
சிலாவத்துறை அரிப்பு பகுதியில் ரூ.20 மில்லியனுக்கும் அதிகமான தெரு மதிப்புள்ள கஞ்சா தொகையானது கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படையினர், 2025 ஜூலை 29 ஆம் திகதி அதிகாலை சிலாவத்துறை அரிப்பு பகுதியில், நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் ரூ. 20 மில்லியனுக்கும் அதிகமான தெரு மதிப்புள்ள நூற்று ஒரு (101) கிலோகிராம் அறுநூறு (600) கிராம் கேரள கஞ்சாவானது பறிமுதல் செய்யப்பட்டது.
31 Jul 2025
நீர்கொழும்பு பகுதியில் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வர முட்பட்ட 1285 கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் 604 கிலோகிராம் உலர்ந்த இஞ்சியை கடற்படையினர் கைப்பற்றினர்

இலங்கை கடற்படையினர், நீர்கொழும்பு, குட்டிதூவ மற்றும் குடாபாடுவ கடற்கரைப் பகுதிகளில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற ஆயிரத்து இருநூற்று எண்பத்தைந்து (1285) கிலோகிராம் பீடி இலைகள், அறுநூற்று நான்கு (604) கிலோகிராம் உலர்ந்த இஞ்சி மற்றும் மருந்துப் பொருட்கள் அடங்கிய ஒரு கொள்கலன் (01) ஆகியவற்றை கடற்படையினரால் 2025 ஜூலை 29 ஆம் திகதி அன்று கைப்பற்றப்பட்டன.
30 Jul 2025
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு இந்திய மீன்பிடி படகுகள் பத்தலங்குண்டுவ மற்றும் மன்னாரின் வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், 2025 ஜூலை 28 பத்தலங்குண்டுவ கடல் பகுதியிலும் மன்னாருக்கு வடக்கே உள்ள கடல் பகுதியிலும் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பதினான்கு (14) இந்திய மீனவர்களுடன் இந்திய மீன்பிடி இரண்டு (02) இந்திய மீன்பிடி படகுகளையும் இலங்கை
29 Jul 2025
உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 65 பேர் கடற்படையினரால்கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படை, கடந்த பதினைந்து நாட்களில் (2025 ஜூலை 09 முதல் 22 வரை) உள்ளூர் நீர்ப்பரப்புகளில் மேற்கொண்ட நடவடிக்கைகளில், தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் நுட்பங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த பதினாறு (16) டிங்கி படகுகளையும் அறுபத்தைந்து (65) நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
26 Jul 2025
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற பீடி இலைகள், விவசாய இரசாயனங்கள் மற்றும் மசாலாப் பொருட்களுடன் எட்டு சந்தேக நபர்களை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படையினர், 2025 ஜூலை 20 முதல் 22 வரை கற்பிட்டி வெல்லமுண்டலம், இப்பந்தீவு கடல் பகுதி, சிலாவத்துறை சவரிபுரம் அரிப்பு மேற்கு கடற்கரை பகுதி மற்றும் உச்சிமுனை வெல்ல தீவு ஆகிய இடங்களில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் இரண்டாயிரத்து முந்நூற்று தொண்ணூற்றொன்பது (2399) கிலோகிராம் பீடி இலைகள், முப்பத்தைந்து (35) கிலோகிராம் ஏலக்காய் மற்றும் ஒரு தொகை விவசாய இரசாயனங்களை ஏற்றிச் சென்ற நான்கு (04) டிங்கி படகுகளையும், எட்டு (08) சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
24 Jul 2025
உள்நாட்டு நீர்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிக் படகு ஒன்று மன்னார் வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படையினர், 2025 ஜூலை 21 இரவு மன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, உள்நாட்டு நீர்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த நான்கு (04) இந்திய மீனவர்களுடன் இந்திய மீன்பிடி படகுகொன்றறையும் (01) இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.
22 Jul 2025
இரண்டு வார காலப்பகுதியில் கடற்படை நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கைகள் மூலம் போதைப்பொருட்களுடன் 10 சந்தேக நபர்கள் கைப்பற்றப்பட்டன

இலங்கை கடற்படையினர், பொலிஸ், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் பொலிஸ் சிறப்புப் படை ஆகியவை 2025 ஜூலை 05முதல் 19 வரை கடுகண்ணாவ, அலதெனிய, தவுலகல, கம்பஹா, கட்டுநாயக்க, நிலாவெளி, திருகோணமலை மற்றும் மன்னார், நடுகுடா ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட சிறப்பு கூட்டுத் தேடுதல் நடவடிக்கைகளின் போது, பத்து (10) கிராம் நாற்பது (40) மில்லிகிராம் ஐஸ், பதினோராயிரத்து எண்ணூற்று அறுபது (11860) வெளிநாட்டு சிகரெட்டுகள், இருநூற்று அறுபத்து நான்கு (264) மாத்திரைகள் மற்றும் முப்பத்து மூன்று (33) மாத்திரை போத்தல்கள், ஐந்து (05) கிலோகிராம் அறுநூறு (600) கிராம் குஷ் போதைப்பொருள்கள், நூற்று நான்கு (104) கிராம் கேரள கஞ்சாவுடன் பத்து (10) சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்தனர்.
21 Jul 2025