நடவடிக்கை செய்தி

கல்பிட்டியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

இலங்கை கடற்படையினர், மற்றும் பொலிஸாருடன் இணைந்து 2025 ஜனவரி ஆம் திகதி 26 கல்பிட்டி, பள்ளிவாசல்துறை பகுதியில் மேற்கொண்ட விசேட கூட்டு தேடுதல் நடவடிக்கையில், விற்பனைக்கு தயாராக இருந்த ஐஸ் இலங்கை, மூன்று (03) கிராம் எண்பது (80) மில்லிகிராம் போதைப்பொருளுடன் சந்தேகநபர் (01) கைது செய்யப்பட்டார்.

27 Jan 2025

சட்ட விரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 03 சந்தேக நபர்கள் கொழும்பில் கடற்படையினரால் கைது ‍

இலங்கை கடற்படை, கொழும்பு துறைமுகத்தை சூழவுள்ள கடற்பகுதியில் 2025 ஜனவரி மாதம் 25 முதல் நடத்தப்பட்ட சிறப்பு தேடல் நடவடிக்கையின் மூலம், சட்ட விரோதமான ஸ்பியர் கன் (Spear Gun) பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட்ட மூன்று (03) சந்தேக நபர்கள் மற்றும் (01) டிங்கி படகு கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

26 Jan 2025

வெடிபொருட்கள் பதுக்கி வைத்திருந்த இருவர் சந்தேகத்தின் பேரில் மன்னாரில் கைது

மன்னார் போக்குவரத்துச் சபைக் களஞ்சியசாலைக்கு முன்பாகவும் சாந்திபுரம் பகுதியில் 2025 ஜனவரி 24ஆம் திகதி இலங்கை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து நடத்திய கூட்டுத் தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோதமான முறையில் பத்து (10) வாட்டர் ஜெல் வெடிப்பொருள் கூறுகளுடன், மின்சாரம் அல்லாத பத்து (10) டெட்டனேட்டர்கள் மற்றும் பாதுகாப்பு உருகி (02) இரண்டு அடி கொண்டு செல்லப்பட்ட மறைக்கப்பட்டுள்ளன இரண்டு (02) சந்தேக நபர்களுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.

25 Jan 2025

புத்தளத்தில் கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது

இலங்கை கடற்படை, புத்தளம் மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவுடன் இணைந்து இன்று (2025 ஜனவரி 25) அதிகாலை புத்தளம் சின்னப்பாடு கொட்டன்தீவு பிரதேசத்தில் நடத்தப்பட்ட ஒன்றிணைந்த சோதனை நடவடிக்கையின் போது, கேரள கஞ்சா 2 கிலோ 245 கிராம் அளவிலான தொகையுடன் ஒரு பெண் சந்தேகநபரை கைது செய்தனர்.

25 Jan 2025

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற 342 கிலோகிராம் ஏலக்காய் மற்றும் 1231 கிலோகிராம் உலர்ந்த மஞ்சளுடன் கல்பிட்டியில் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது

இலங்கை கடற்படையினர் 2025 ஜனவரி 24 ஆம் திகதி கல்பிட்டி கீரமுண்டலம் கடற்கரைப் பகுதி மற்றும் தோரயடி கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது, 342 கிலோகிராம் ஏலக்காய் மற்றும் 1231 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் ஆகியவற்றைக் கொண்டு சென்ற இரண்டு சந்தேக நபர்களையும் ஒரு டிங்கி படகையும் கைப்பற்றினர். கடல் வழியாக நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வர முயன்ற 02 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

25 Jan 2025

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை தொடரச்சியாக நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது

தீவில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க அனுராதபுரம் மாவட்டத்தின் பதவிய, புத்தங்கல, மகாகனதராவ மற்றும் அளுத்பாரகம பகுதிகளுக்கும், அம்பாறை மாவட்டத்தின் லாஹுகல பகுதிக்கும் கடற்படையின் 04 நிவாரணக் குழுக்களை 2025 ஜனவரி 24 அன்று கடற்படையால் அனுப்பி வைக்கப்பட்டது.

24 Jan 2025

மஹகநதராவ பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படையினரால் தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன

தீவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள மோசமான வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பால் அனுராதபுரம் மாவட்டத்தின் பதவிய, புத்தாங்கல மற்றும் மஹகநதராவ அலுத்பாரகம பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க மூன்று (03) கடற்படை பேரிடர் நிவாரண குழுக்கள் நிறுத்தப்படுவதாகவும், தற்போது அந்த நிவாரண குழுக்கள் புத்தாங்கல மற்றும் மககநதராவ அலுத்பாரகம பகுதிகளில் அதிக மழைவீழ்ச்சி காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.

23 Jan 2025

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவர முயற்சித்த 1289 கிலோ பீடி இலைகளுடன் 02 சந்தேகநபர்கள் கல்பிட்டி கீரமுந்தலம பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், கல்பிட்டி உச்சமுனை, கீரமுந்தலம் கடற்கரை மற்றும் கடற்பகுதியில் 2025 ஜனவரி மாதம் 20 ஆம் திகதி இரவு மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முட்பட்ட சுமார் ஆயிரத்து இருநூற்று எண்பத்தொன்பது (1289) கிலோகிராம் பீடி இலைகளுடன், (ஈரமான எடை) ஒரு டிங்கி படகு (01), இழுவைப் படகுகள் இரண்டு (02), உழவு இயந்திரங்கள் இரண்டு (02) மற்றும் இரண்டு (02) சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

21 Jan 2025

கல்பிட்டியில் கடற்படையினரால் 2137 சங்குகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

இலங்கை கடற்படையினரால், 2025 ஜனவரி மாதம் 14 ஆம் திகதி கல்பிட்டி பராமுனை கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் டிங்கி மூலம் கொண்டு செல்லப்பட்ட, அனுமதிக்கப்பட்ட அளவை விட சிறிய அளவிலான சுமார் இரண்டாயிரத்து முப்பத்தேழு (2137) ஹேக் சங்குகளுடன் சந்தேகநபர் ஒருவர் (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டார்.

15 Jan 2025

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட 864 கிலோவுக்கும் அதிகமான பிடி இலைகள் நீர்கொழும்பு தடாகத்தில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினரால், 2025 ஜனவரி மாதம் 13 ஆம் திகதி இரவு நீர்கொழும்பு தடாகப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்ட விரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற, சுமார் எண்ணூற்று அறுபத்து நான்கு (864) கிலோகிராமிற்கும் அதிகமான பீடி இலைகளுடன் இரண்டு (02) டிங்கி படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

15 Jan 2025