நடவடிக்கை செய்தி

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது

தீவை பாதித்துள்ள பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தெற்கு, கிழக்கு, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களை உள்ளடக்கி அனர்த்த நிவாரணக் குழுக்கள் இன்று (2025 நவம்பர் 28,) கடற்படையால் கடமையில் ஈடுத்தப்பட்டுள்ளன, மேலும் இந்த நிவாரணக் குழுக்கள் தொடர்ந்து அனர்த்த நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

28 Nov 2025

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 2250 கிலோ பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்

இலங்கை கடற்படையினர், 2025 நவம்பர் 22 ஆம் திகதி, பமுனுகம, கெபும்கொட மற்றும் வெல்லாவிடிய பகுதிகளில் காவல்துறையினருடன் இணைந்து நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் மூலம், நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் இரண்டாயிரத்து இருநூற்று ஐம்பது (2250) கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் நான்கு (04) டிங்கி படகுகளை கடற்படையினர் கைப்பற்றினர்.

27 Nov 2025

புத்தளத்தில் போக்குவரத்துக்காக தயாரிக்கப்பட்ட 699 கிலோகிராம் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்

இலங்கை கடற்படையினர், 2025 நவம்பர் 25 ஆம் திகதி புத்தளம் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டு போக்குவரத்துக்கு தயார் நிலையில் வைத்திருந்த சுமார் அறுநூற்று தொண்ணூற்றொன்பது (699) கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் ஒரு (01) கெப் வண்டியுடன் இரண்டு (02) சந்தேக நபர்களைக் கடற்படையினர் கைப்பற்றினர்.

26 Nov 2025

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையினர் தொடர்ந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்

தென் மாகாணத்தின் காலி மாவட்டத்தின் தவலம மற்றும் நாகொட பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நிறுத்தப்பட்டிருந்த கடற்படை அனர்த்த நிவாரணக் குழுக்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பாக மீட்பதற்கும் அவர்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் சிறிய படகுகளைப் பயன்படுத்தி தங்கள் அனர்த்த நிவாரணப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.

26 Nov 2025

புத்தளத்தில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பூச்சிக்கொல்லியை கடற்படையினர் கைப்பற்றினர்

இலங்கை கடற்படையினர், 2025 நவம்பர் 20 ஆம் திகதி புத்தளம், காரைதீவு கடற்பரப்பில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பூச்சிக்கொல்லிகளுடன் கூடிய ஒரு டிங்கி (01) படகையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

25 Nov 2025

தெற்கு கடற்கரையின் ஆழ்கடலில் 376 கிலோகிராமை விட அதிகமான ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிக் கப்பலுடன் ஆறு சந்தேக நபர்களை கடற்படையினர் கைப்பற்றினர்

இலங்கை கடற்படையால், இலங்கையின் தெற்கே ஆழ்கடலில் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நச்சு போதைப்பொருட்களை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் உள்ளூர் பல நாள் மீன்பிடிக் படகுடன் ஆறு (06) சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்டனர். பல நாள் மீன்பிடிக் கப்பலும் சந்தேக நபர்களும் 2025 நவம்பர் 20 ஆம் திகதி தங்காலை மீன்வளத் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர். பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் நடத்திய நிபுணர் பரிசோதனையின் போது, போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் 18 பொதிகளில் 261 கிலோகிராமை விட அதிகமான ஐஸ் மற்றும் 115 கிலோகிராமை விட அதிகமான ஹெராயின் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், போதைப்பொருள் கையிருப்புடன், ரிவால்வர் வகை மற்றும் பிஸ்டல் வகை 02 துப்பாக்கிகள் மற்றும் 02 மெகசின்களுடன் ஒரு செயற்கைக்கோள் தொலைபேசியும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டதுடன், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட ஆகியோர் போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்களை கண்காணிப்பதில் பங்கேற்றனர்.

21 Nov 2025

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 840 கிலோகிராம் பீடி இலைகளுடன் கெப் வண்டியொன்று கல்பிட்டியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன

இலங்கை கடற்படை, 2025 நவம்பர் 11, அன்று கல்பிட்டி, கப்பலடி மற்றும் ரெட்பானா கடற்கரைகளில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்டு போக்குவரத்துக்கு தயார் செய்யப்பட்ட எண்ணூற்று நாற்பது (840) கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட சவர்க்காரக் கட்டிகளுடன் கெப் வண்டியொன்றும் (01) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

13 Nov 2025

சட்டவிரோத மீன்பிடியை தடுப்பதற்காக கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 50 பேர் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படை, 2025 அக்டோபர் 27 முதல் நவம்பர் 10 வரை உள்ளூர் கடல் பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள் மற்றும் சட்டவிரோதமான முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஐம்பது (50) நபர்களுடன் பதினைந்து (13) டிங்கி படகுகள், ஒரு (01) மோட்டார் சைக்கிள் ஆகியவற்றைக் கடற்படையினர் கைப்பற்றினர்.

13 Nov 2025

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்தப்பட்ட 742 கிலோ பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்

இலங்கை கடற்படையினர் 2025 நவம்பர் 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு களப்பு பகுதியிலும் சிலாபத்தில் உள்ள கருகபனை களப்பு பகுதியிலும் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் எழுநூற்று நாற்பத்திரண்டு (742) கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் மூன்று (03) டிங்கி படகுகளை கடற்படையினர் கைப்பற்றினர்.

12 Nov 2025

உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மீன்பிடி படகு வடகடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படை, கடலோர காவல்படையுடன் இணைந்து, 2025 நவம்பர் 09 ஆம் திகதி இரவு அனலைதீவுக்கு அருகே இலங்கை கடல் பகுதியில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, உள்ளூர் கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட ஒரு (01) இந்திய மீன்பிடி படகு மற்றும் பதினான்கு (14) இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

10 Nov 2025