நடவடிக்கை செய்தி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 பேர் கடற்படையினரால் கைது

திருகோணமலை, நிலாவேளி மற்றும் லங்காபடுன கடற்பகுதியில் 2023 ஓகஸ்ட் 03 மற்றும் 04 ஆம் திகதிகளில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது வெடிபொருட்கள் பயன்படுத்தி மற்றும் சட்டவிரோத இரவு நேர சுழியோடி நடவடிக்கைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பத்து (10) பேர், மூன்று (03) டிங்கி படகுகள் , சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட மீன்கள் மற்றும் கடல் அட்டைகள் நூற்று பதினாறுடன் (116) சுழியோடி உபகரணங்களும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

05 Aug 2023

சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 75 கிலோ கிராம் பீடி இலைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினரால் புத்தளம், சேரக்குளிய கடற்கரைப் பகுதியில் இன்று (2023 ஆகஸ்ட் 4,) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்வதற்கு தயார்படுத்தப்பட்டிருந்த நிலையில் எழுபத்தைந்து (75) கிலோகிராம் (ஈரமான எடை) எடையுள்ள பீடி இலைகளுடன் சந்தேக நபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டுள்ளார்.

05 Aug 2023

திருகோணமலை ஜெயநகர் பகுதியில் வர்த்தக வெடிபொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

இலங்கை கடற்படையினர் குச்சவேளி பொலிஸாருடன் இணைந்து திருகோணமலை ஜெயநகர் மற்றும் பொடுவகட்டு கடற்பகுதியில் 2023 ஜூலை 31 மற்றும் 2023 ஆகஸ்ட் 03 ஆம் திகதிகளில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது 05 வர்த்தக வெடி குச்சிகள், பதினான்கு (14) வெடிபொருட்கள் மற்றும் பதினேழு (17) மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்களுடன் சந்தேக நபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டார்.

05 Aug 2023

தெற்கு கடலில் நோய்வாய்ப்பட்ட மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி

ஹம்பாந்தோட்டையில் இருந்து சுமார் 20 கடல் மைல் (சுமார் 37 கிமீ) தொலைவில், இலங்கைக்கு தென்கிழக்கு கடல் பகுதியில், இலங்கையின் பல நாள் மீன்பிடிக் கப்பலொன்றில் நோய்வாய்ப்பட்ட மீனவரொருவரை கரைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக கொண்டு செல்ல இலங்கை கடற்படையினர் இன்று (2023 ஆகஸ்ட் 1) நடவடிக்கை எடுத்துள்ளனர்.

02 Aug 2023

வத்தளை பகுதியில் ஏற்பட்ட திடீர் தீயை அணைக்க கடற்படையின் உதவி

வத்தளை, பள்ளிய வீதியிலுள்ள வீடொன்றில் இன்று (2023 ஆகஸ்ட் 01) காலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தை கட்டுபடுத்தி அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுப்பதற்காக கடற்படையினர் உதவி வழங்கினர்.

01 Aug 2023

யாழ்ப்பாணம் அரியாலை கடற்கரை பகுதியில் இருந்து 51 வர்த்தக வெடி பொருட்கள் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் 2023 ஜூலை மாதம் 29 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது அரியாலை கடற்கரைப் பகுதியில் மிக நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 51 வர்த்தக வெடி பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.

30 Jul 2023

கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 03 பேர் கடற்படையினரால் கைது

புல்முடே கொக்கிளாய் கடற்பகுதியில் இலங்கை கடற்படையினரால் 2023 ஜூலை 27 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத வர்த்தக வெடிமருந்துகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று (03) பேர், ஒரு டிங்கி படகு (01), சுமார் நூற்று ஐந்து (105) கிலோகிராம் எடையுள்ள மீன் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.

28 Jul 2023

கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 19 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் புல்முடை, கோகிளாய் கடற்பகுதியில் 2023 ஜூலை 25 ஆம் திகதி மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத வணிக வெடி பொருட்களை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பத்தொன்பது (19) நபர்களுடன் நான்கு (04) டிங்கி படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் கைபற்றினர்.

26 Jul 2023

24 கிலோ கிராமுக்கும் அதிகமான மான் இறைச்சியுடன் 03 பேர் கடற்படையினரால் கைது

பானம சாஸ்திரவேளி பகுதியில் 2023 ஜூலை மாதம் 25 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது 24 கிலோவிற்கும் அதிகமான மான் இறைச்சியுடன் மூவர் (03) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

26 Jul 2023

சுமார் 606 கிலோ கிராம் பீடி இலைகள் கல்பிட்டி பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் கல்பிட்டி தடாகத்திற்குச் சொந்தமான மட்டத்தீவு அண்மித்த பகுதியில் 2023 ஜூலை 24 ஆம் திகதி இரவு மெற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த கடற்பகுதியில் மிதந்த 606 கிலோ கிராம் (ஈரமான எடை) பீடி இலைகளை கைப்பற்றினர்.

25 Jul 2023