நடவடிக்கை செய்தி
சுமார் 10 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை மற்றும் புங்குடுதீவுக்கு இடைப்பட்ட கடற்பகுதியில் மிதந்து கொண்டிருந்த சுமார் 34 கிலோ 38 கிராம் (ஈரமான எடை) கொண்ட கேரள கஞ்சாவை இலங்கை கடற்படையினர் இன்று (2022 ஆகஸ்ட் 04) அதிகாலை மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது கைப்பற்றியுள்ளனர்.
04 Aug 2022
சுமார் 14 மில்லியன் ரூபா பெறுமதியான மற்றுமொரு கேரள கஞ்சா பொதி மன்னாரில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

இலங்கை கடற்படையினர் இன்று (2022 ஆகஸ்ட் 03) காலை மன்னார் மனல்பாறை பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 49 கிலோ 380 கிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சாவை கைப்பற்றினர்.
04 Aug 2022
திருகோணமலை கடலில் தத்தளித்த மூன்று மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் மீட்பு

திருகோணமலை வெளி துறைமுகப் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது விபத்துக்குள்ளான சிறிய மீன்பிடிப் படகொன்றில் இருந்த மூன்று (03) மீனவர்களை 2022 ஆகஸ்ட் 02 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் மீட்டனர்.
04 Aug 2022
சுமார் 14 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்

இலங்கை கடற்படையினர் 2022 ஆகஸ்ட் 02 ஆம் திகதி மாலை மன்னார் மனல்பாறை பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 47 கிலோ மற்றும் 240 கிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சாவை கைப்பற்றினர்.
03 Aug 2022
இலங்கை கடற்படையின் 48 வெள்ள நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில்

திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரண நடவடிக்கைகளை வழங்குவதற்காக 48 கடற்படை வெள்ள நிவாரணக் குழுக்கள் இன்று காலை (2022 ஆகஸ்ட் 02) தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
02 Aug 2022
சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த 47 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படை மற்றும் வென்னப்புவை பொலிஸாரால் 2022 ஜூலை 31 ஆம் திகதி இரவு வென்னப்புவ நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது வென்னப்புவையிருந்து கடல் மார்க்கமாக வெளிநாட்டிற்கு சட்டவிரோத குடியகல்வு முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 47 பேர் கைது செய்யப்பட்டனர்.
01 Aug 2022
நடுக்கடலில் படகு பழுதாகி தவித்த இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினரால் மீட்பு

படகில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறினால் தலைமன்னாருக்கு வடக்கு இலங்கை கடற்பரப்பில் தத்தளித்த 06 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட இந்திய மீனவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டு, 2022 ஜூலை 31 அன்று சர்வதேச கடல் எல்லைக் கோட்டில் (IMBL) மற்றொரு இந்திய மீன்பிடி படகொன்றிடம் ஒப்படைக்கப்பட்டது.
31 Jul 2022
சுமார் 4 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினரால் 2022 ஜூலை 23 ஆம் திகதி இரவு மன்னார், பேசாலை பகுதியில் மேற்கொண்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 14 கிலோ 980 கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் (01) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
24 Jul 2022
வெற்றிகரமாக பயிற்சியை பூர்த்தி செய்த 36 நடுநிலை அதிகாரிகளின் வெளியேறல் அணிவகுப்பு

ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மற்றும் திருகோணமலை கடல் மற்றும் சமுத்திரவியல் கலாசாலையில் பயிற்சி பெற்ற கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 35வது (தொழில்நுட்ப) மற்றும் 36வது ஆட்சேர்ப்பின் சேர்ந்த 36 நடுநிலை அதிகாரிகளின் வெளியேறும் நிகழ்வு 2022 ஜூலை 22 ஆம் திகதி திருகோணமலை கடல் மற்றும் சமுத்திரவியல் கலாசாலையில் இடம்பெற்றதுடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் அழைப்பின் பேரில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்.
23 Jul 2022
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்று மன்னார் கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

மன்னாருக்கு வடக்கு இலங்கை கடற்பரப்பில் 2022 ஜூலை 20 ஆம் திகதி இரவு மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது சர்வதேச கடல் எல்லை மீறி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றுடன் 06 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
21 Jul 2022