நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 979 கிலோகிராம் உலர் இஞ்சியுடன் மூன்று சந்தேகநபர்கள் கல்பிட்டி எத்தாலை களப்பு பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

கடற்படையினர் 2025 ஜூலை 01 அன்று, கல்பிட்டி எத்தாலை களப்பு பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வர முயன்ற தொள்ளாயிரத்து எழுபத்தொன்பது (979) கிலோகிராம் உலர் இஞ்சியை ஏற்றி வந்த(03) மூன்று டிங்கிகளுடன் சந்தேகநபர்கள் (03) மூவரும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்.

02 Jul 2025

மன்னாரில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற 65 புறாக்களுடன் 2 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

மன்னார் நடுக்குடா கடற்கரைப் பகுதியில் 2025 ஜூன் 30 ஆம் திகதி கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட அறுபத்தைந்து (65) புறாக்களை ஏற்றி வந்த ஒரு டிங்கி (01) படகையும், இரண்டு (02) சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

02 Jul 2025

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிக் படகு ஒன்று மன்னார் வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படையினர், 2025 ஜூன் 30 இரவு மன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஏழு (07) இந்திய மீனவர்களுடன் இந்திய மீன்பிடி படகுகொன்றறையும் (01) இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.

02 Jul 2025

உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 30 பேர் கடற்படையினரால்கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படை, இலங்கை கடலோர காவல்படை மற்றும் மீன்வள மற்றும் நீர்வளத் திணைக்களத்துடன் இணைந்து, கடந்த இரண்டு வருட நாட்களில் (2025 ஜூன் 09 முதல் ஜூன் 20 வரை) உள்ளூர் நீர்நிலைகளை உள்ளடக்கிய தேடிதல் நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் போது, பத்து (10) டிங்கி படகுகள் மற்றும் இரண்டு (02) தெப்பம் படகுகள் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட முப்பது (30) நபர்களைக் கைப்பற்றி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

29 Jun 2025

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிக் படகு ஒன்று மன்னார் வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், இன்று (2025 ஜூன் 29) அதிகாலை மன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த எட்டு (08) இந்திய மீனவர்களுடன் இந்திய மீன்பிடி படகுகொன்றறையும் (01) இலங்கை கடற்படையினர் கைது செய்யதனர்.

29 Jun 2025

வட கடலில் 47 மில்லியன் ரூபாவை விட பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் 03 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

யாழ்ப்பாணம் காரைநகர் கோவிலான் பகுதிக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் இன்று (2025 ஜூன் 27) அதிகாலை இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, தெரு மதிப்பு ரூ. 47 மில்லியனுக்கும் அதிகமான சுமார் இருநூற்று ஒன்பது (209) கிலோகிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற மூன்று (03) சந்தேக நபர்களும், ஒரு டிங்கி (01) படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

29 Jun 2025

தலைமன்னார் மணல் திட்டுக்கு அருகில் உள்ளூர் கடற்பரப்பில் விபத்தில் சிக்கிய இந்திய மீன்பிடி படகிலிருந்து மீனவர்களை கடற்படையினர் மீட்டனர்

நிலவும் பாதகமான வானிலை மற்றும் கடல் கொந்தளிப்பான சூழ்நிலையில், 2025 ஜூன் 25 ஆம் திகதி தலைமன்னாருக்கு அப்பால் உள்ள இலங்கை கடல் பகுதியில் உள்ள ஏழாவது மணல் திட்டுக்கு அருகே இந்திய கடற்பரப்பிலிருந்து இலங்கை கடற்பரப்பிற்குள் மிதந்து வந்து கடலில் கவிழ்ந்த இந்திய படகு ஒன்றில் இருந்த நான்கு (04) மீனவர்களை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.

27 Jun 2025

கடற்படை நடத்திய சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, சந்தேக நபர் ஒருவருடன் சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன

இலங்கை கடற்படை, பொலிஸாருடன் இணைந்து, 2025 ஜூன் 16 அன்று ஒரு சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது, இதன் போது சட்டவிரோத விற்பனைக்காக தயார் நிலையில் இருந்த சுமார் 3200 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒரு (01) சந்தேக நபரை கைது செய்தனர்.

25 Jun 2025

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரபட்ட 1300 கிலோகிராமை விட அதிகமான பீடி இலைகளும் 29000 ஐ விடவும் அதிகமான பீடி தொகையினை கடற்படையினர் கைப்பற்றினர்

இலங்கை கடற்படையினர் 2025 ஜூன் 22 ஆம் திகதி மன்னார், நடுக்குடா மற்றும் ஓலைத்தொடுவாய் ஆகிய பிரதேசங்களில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகப்படும் சுமார் ஆயிரத்து முந்நூற்று அறுபத்தைந்து (1365) கிலோகிராம் பீடி இலைகளும், சுமார் இருபத்தொன்பதாயிரத்து நூறு (29100) பீடிகளும் ஒரு புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்தபோது கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

24 Jun 2025

உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 76 பேர் கடற்படையினரால்கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படை, கடந்த இரு வாரங்களில் (2025 மே 26 முதல் ஜூன் 07 வரை) உள்ளூர் கடல் பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கைகளில், தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் நுட்பங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இருபது (20) டிங்கி படகுகளையும் எழுபத்தாறு (76) நபர்களையும் கைப்பற்றியது.

11 Jun 2025