நடவடிக்கை செய்தி
சட்டவிரோதமான முறையில் இரவு சுழியோடி நடவடிக்கைகள் மேற்கொண்ட 05 பேர் கடற்படையினரால் கைது

மன்னார் வங்காலை மற்றும் சிலாவத்துறை கடற்கரைப் பகுதியில் 2024 நவம்பர் மாதம் 13 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது, சட்டவிரோத சுழியோடி நடவடிக்கையின் மூலம் பிடிக்கப்பட்ட சுமார் ஆயிரத்து ஐம்பத்தைந்து (1055) கடலட்டைகளுடன், ஐந்து (05) சந்தேக நபர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
14 Nov 2024
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்று கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் இன்று (2024 நவம்பர் 12) யாழ்ப்பாணம், சுண்டிக்குளம் பகுதிக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றுடன் 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
12 Nov 2024
சட்டவிரோதமான முறையில் இரவு சுழியோடி நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் மூன்று பேர் மன்னாரில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், மன்னார் வான்காலை பிரதேசத்தில் இன்று (2024 நவம்பர் 09) காலை மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், சட்டவிரோதமான முறையில் இரவு நேர சுழியோடி நடவடிக்கையின் போது, பிடிக்கப்பட்ட சுமார் ஐந்நூற்று எண்பத்தைந்து (585) கடலட்டைகளுடன், சந்தேகநபர்கள் மூன்று (03) பேர் மற்றும் சுழியோடி உபகரணங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
09 Nov 2024
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 பேர் மன்னாரில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், 2024 நவம்பர் 07 ஆம் திகதி மன்னார் சௌத்பார் கடல் பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இரண்டு (10) நபர்களுடன் ஒரு (01) டிங்கி படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
08 Nov 2024
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 04 பேர் திருகோணமலை கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், திருகோணமலை குச்சவெளி கடற்பகுதியில் 2024 நவம்பர் 05 ஆம் திகதி மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நான்கு (04) நபர்களுடன் ஒரு (01) டிங்கி படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
06 Nov 2024
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சுமார் 1287 கிலோ கிராமுக்கும் அதிகமான பீடி இலைகள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், மன்னார் கீரி கடற்கரையை அண்மித்த பகுதியில் இன்று (2024 நவம்பர் 04) மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில், ஆயிரத்து இருநூற்று எண்பத்தேழு (1287) கிலோகிராம் பீடி இலைகள் (ஈரமான எடை) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
04 Nov 2024
ஐஸ் போதைப்பொருள், வெளிநாட்டு சிகரெட்டுக்கள் மற்றும் சட்டவிரோத மதுபானங்களுடன் 02 சந்தேகநபர்கள் புத்தளம் நாகவில்லுவ பிரதேசத்தில் வைத்து கைது

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்துடன் இணைந்து இன்று (2024 நவம்பர் 01) புத்தளம், நாகவில்லுவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, விற்பனைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த, ஐஸ் போதைப்பொருள் எட்டு (08) கிராம், வெளிநாட்டு சிகரெட்டுகள் முந்நூற்று இருபது (320), கோடா லீற்றர் நானூற்று நாற்பது (440) மற்றும் நூற்று (100) லீற்றர் மேலும் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட 100 லீற்றர் ஸ்பிரிட் மற்றும் நூறு (100) லீற்றர் மதுபானத்துடன் இரண்டு (02) சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
02 Nov 2024
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 25 பேர் திருகோணமலையில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2024 நவம்பர் 01 ஆம் திகதி திருகோணமலை அடுக்குப்பாடு கடற்பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஆறு (06) நபர்களுடன் ஒரு (01) டிங்கி படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
02 Nov 2024
சட்டவிரோதமான முறையில் இரவு சுழியோடி நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் ஆறு (06) பேர் மன்னாரில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், மன்னார் பாண்டாரவெளி கடற்பகுதியில் இன்று (2024 நவம்பர் 01) காலை மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், சட்டவிரோதமான முறையில் இரவு நேர சுழியோடி நடவடிக்கையின் போது, பிடிக்கப்பட்ட சுமார் இருநூற்று இருபத்தி ஏழு (227) கடலட்டைகளுடன், சந்தேகநபர்கள் ஆறு (06) பேர் மற்றும் டிங்கி படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
01 Nov 2024
சட்டவிரோதமான முறையில் பிடித்த கடலட்டைகளுடன் மூன்று (03) சந்தேகநபர்கள் யாழ்ப்பாணத்தில் கைது

இலங்கை கடற்படையினர், யாழ்ப்பாணம் வெண்புரவிநகர் பகுதிக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் 2024 ஒக்டோபர் 2 ஆம் திகதி காலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, முறையான மீன்பிடி அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட இருநூற்று தொன்னூற்றி ஒன்று (291) கடலட்டைகளுடன் மூன்று (03) சந்தேகநபர்கள் மற்றும் இழுவை படகு ஒன்றும் கைது செய்யப்பட்டன.
30 Oct 2024